Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக ஓகா, மும்பைக்கு சிறப்பு ரெயில்கள்

டிசம்பர் 09, 2020 06:23

மதுரை: தென்னக ரெயில்வே, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக பண்டிகை கால சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, ராமேசுவரம்-புவனேசுவர், ராமேசுவரம்-ஓகா, நாகர்கோவில்-மும்பை ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கவுள்ளது. இதில், புவனேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் பண்டிகை கால சிறப்பு ரெயில் (வ.எண்.08496) வருகிற 11-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். இந்த ரெயில் புவனேசுவரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.35 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13-ந்தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த இந்த ரெயில்(வ.எண்.08495 ) ராமேசுவரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு புவனேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் குர்தா ரோடு, பெர்காம்பூர், விஜய நகரம், விசாகப்பட்டினம், துவ்வாடா, விஜயவாடா, நெல்லூர், குண்டூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக குஜராத் மாநிலம் ஓகா கோட்டைக்கு வருகிற 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06733) ராமேசுவரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. திங்கட்கிழமை காலை 10.20 மணிக்கு ஓகா கோட்டை ரெயில் நிலையம் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் ஓகா கோட்டையில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06734) ஓகாவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை மாலை 3.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்தடைகிறது.

இந்த ரெயில்கள் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, துரோணாசலம், கர்னூல் சிட்டி, மெகபூப் நகர், கச்சகுடா, கமாரெட்டி, நிஜாமாபாத், முட்கட், நான்டேட், பூர்ணா, பர்பானி, ஜல்னா அவுரங்காபாத், நாகர்சால், மன்மாட், ஜல்கான், நன்டூர்பர், சூரத், வடோதரா, ஆமதாபாத், விரம்கம், சுரேந்திர நகர், வான்கனேர், ராஜ்கோட், ஹாபா, ஜாம்நகர், ஹம்பாலியா, துவாரகா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பைக்கு வருகிற 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06352) நாகர்கோவிலில் இருந்து மேற்கண்ட நாட்களில் காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 11.05 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வெள்ளி மற்றும் திங்கட் கிழமைகளில் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்(வ.எண்.06351) மும்பையில் இருந்து மேற்கண்ட நாட்களில் இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, தாடி பத்திரி, குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ரெய்ச்சூர், யாட்கிர், வாடி, கல்புர்கி, சோலாப்பூர், குர்துவாடி, டான்ட் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தலைப்புச்செய்திகள்